ஆந்திர மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பேருந்து யாத்திரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது. பேருந்து யாத்திரைக்கான துவக்க விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் செவ்வாயன்று கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஆந்திர மக்களின் எரியும் பிரச்சனைகளை எடுத்துரைத்த சிபிஎம் தலைவர்கள், மக்கள் பிரச்சனைகளை மோசமாக்கும் கொள்கைகளை கொண்ட ஒன்றிய பாஜக மற்றும் ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர்சி காங்கிரஸ் ஆகிய இரு அரசுகளையும் கடுமையாக சாடினார்கள்.